துப்பு ஆர் திருமேனி – பவளம் போன்ற சிவந்த உடலையும் தும்பிக்கையான் பாதம் – தும்பிக்கையையும் உடைய விநாயகப் பெருமானது திருவடிகளை, பூக்கொண்டு தப்பாமற் சார்வார் தமக்கு – நாள் தோறும் அடைந்து தவறாது மலரிட்டு வணங்கி வருவோருக்கு, நல்ல வாக்குண்டாம் – சிறந்த பேச்சு வன்மை உண்டாகும், நல்ல மனம் உண்டாம் – உயர்ந்த மனம் உண்டாகும், மாமலராள் நோக்குண்டாம் – சிறந்த செந்தாமரைப் பூவில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் அருட்பார்வை கிட்டும், மேனி நுடங்காது – அவர்களுடைய உடல் பிணியால் வாட்டமடையாது. (துப்பு- பவளம்) (நுடங்குதல் – வாடி வதங்குதல்)
புனிதனின் பொற்காலை வணக்கங்கள்
ReplyDeleteவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக் கொண்டு
தும்பார் “திருமேனித் தும்பிக்கை யான்” பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
-ஒளவையார்
விளக்கம்:
துப்பு ஆர் திருமேனி – பவளம் போன்ற சிவந்த உடலையும் தும்பிக்கையான் பாதம் – தும்பிக்கையையும் உடைய விநாயகப் பெருமானது திருவடிகளை, பூக்கொண்டு தப்பாமற் சார்வார் தமக்கு – நாள் தோறும் அடைந்து தவறாது மலரிட்டு வணங்கி வருவோருக்கு, நல்ல வாக்குண்டாம் – சிறந்த பேச்சு வன்மை உண்டாகும், நல்ல மனம் உண்டாம் – உயர்ந்த மனம் உண்டாகும், மாமலராள் நோக்குண்டாம் – சிறந்த செந்தாமரைப் பூவில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் அருட்பார்வை கிட்டும், மேனி நுடங்காது – அவர்களுடைய உடல் பிணியால் வாட்டமடையாது. (துப்பு- பவளம்) (நுடங்குதல் – வாடி வதங்குதல்)